இது என் இசைநாயகனுக்காக(உலக ஞானம் காணத்தொடங்கிய வயது முதலே)
நேற்றே இந்தப்பதிவினை நான் இட்டிருக்கவேண்டும் ஆனால் பிரார்த்தனைகள் காரணமாக முடியாமல்போனது......
என் உள்ளத்தின் எதிரொலிகள் உங்கள் உள்ளத்திலும்கூட எதிரொலித்திருக்கலாம்.
வாசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வரிகளோடு.....
இசையோடு வந்துஇ இசையோடு தவழ்ந்துஇ இசையை ஆத்மார்த்தமாக உணரத்தொடங்கிய என் ஒன்பதாவது வயதில்இ ஒய்யாரமாய் என் ஒவ்வொரு அணுவையும் உன் இசையால் வசியப்படுத்தி இன்றுவரை உன் இசைக்கட்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இசைப்புயலே இது உனக்காக...
இன்று உலகம் முழுக்க ஒரே நாமம் - அது
இசையினால் ஆஸ்கார் மீட்டிய இசைப்புயலின் நாமம்!
பசிக்காக பத்து வயதில் கீ- போர்ட் ஏந்திய கரங்களுக்கு
பலதரப்பட்ட ஏமாற்றங்களை ஏய்த்து போராட்டங்களைப் புறந்தள்ளி
பதவிசாய்க்கிடைத்தது இன்று ஆஸ்கார் எனும் பத்தியம்!
பல்லாயிரக்கணக்கான தமிழ் இசை உள்ளங்களும் சேர்ந்தே-உன்னை
பந்தமாயும் சொந்தமாயும் கொண்டாட
பல்திசையும் எதிரொலிக்கிறது இசைக்கும் தமிழர்களுக்கும்
தரணியில் நீ தேடித்தந்த புகழ் !
(அதையும் வழமை போலவே இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டான் அந்த நல்நெஞ்சக்காரன்....)
சின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு
மார்தட்டிக்கொள்ளும் மாந்தர்களுக்கு மத்தியில்.....
'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து
தமிழ்த்திரை இசையின் தங்கமென தரம் குத்தப்பட்ட போதும்சரிஇ
தன் இசைப்பயணத்தில் மில்லியன் கணக்கான மக்களையும் இணைத்து
'தரம் என் இசையில் நிரந்தரம்' என்ற உன் மந்திரத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள்
புதுப்புது இசை நுணுக்கங்களை உத்திகளைப்புகுத்தி
புது இசைப்புரட்சி படைத்த போதும்சரிஇ
சர்வதேசத்தைத்தொட்ட விருதுகளை நீ தொட்டுதூக்கியபோதும்சரிஇ
நீ நீயாகவே இருந்திருக்கிறாய் ! இனியும் அப்படித்தான் .....
கணணி வித்தை காட்டியே நீ சாகசம் செய்கிறாய் எனஇ உன்னை இழிந்த உள்ளங்களையும் இன்று உன் புகழ் பாட வைத்தாயே.....
அங்கே நிற்கிறாய் நீ !
எல்லோரும் சொல்கிறார்கள்...
"ஆஸ்கார் ரஹ்மானுக்கு பெருமை சேர்த்ததாம்"
இல்லை.......
ரஹ்மான் கரங்களுக்குள் புகுந்து கொண்டதால் ஆஸ்காருக்குத்தான் பெருமை பற்றிக்கொண்டது !
( ஹி ஹி ...வைரமுத்து மாதிரி கொஞ்சம் முயற்சி செய்தேனுங்கோ .....)
இவரைத்தொடர்ந்து இனி பட்டியலில் இணையப்போகும் உலகத்தமிழன் யார் ??
காத்திருக்கிறேன் ....
No comments:
Post a Comment